Home இலங்கை ஆளுனர் நிதியத்திடம் இருந்து வடமாகாண சபை பெற்ற 14 கோடி 40 இலட்சம் ரூபாவை செலவு செய்யுங்கள் – சீ .வீ .கே.

ஆளுனர் நிதியத்திடம் இருந்து வடமாகாண சபை பெற்ற 14 கோடி 40 இலட்சம் ரூபாவை செலவு செய்யுங்கள் – சீ .வீ .கே.

by admin



குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆளுனர் நிதியத்திடம் இருந்து   14 கோடி 40 இலட்சம் ரூபாயை வடமாகாண சபை பெற்று ஒருவருடங்களை கடந்த நிலையிலும் இதுவரை அந்த பணத்தில் ஒரு சதம் கூட செலவழிக்கப்படவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு அவைத்தலைவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாண ஆளுனர் நிதிய வைப்பில் இருந்த 14 கோடி 40 இலட்சம் ரூபாய் பணத்தினை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் , பெற்றோரை இழந்த பிள்ளைகள் , பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோருக்கு உதவும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த பணத்தினை மாகாண சபை பெற்று ஒரு வருடத்தினை கடந்த நிலையிலும் இதுவரையில் அந்த பணத்தில் ஒரு சதம் கூட செலவு செய்யாமல் வடமாகாண பிரதம செயலாளரின் கணக்கில் வங்கியில் வைப்பிலிடப்பட்டு இருக்கின்றது.

தற்போது மகளீர் விவகார அமைச்சராக அனந்தி சசிதரன் பொறுப்பேற்று உள்ளார். அவராவது இந்த பணத்தினை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் செயர்த்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அவைத்தலைவர் கோரினார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Eliathamby Logeswaran July 21, 2017 - 1:53 pm

மகளீர் விவகார அமைச்சராக அனந்தி சசிதரன் பொறுப்பேற்று உள்ளார். அவராவது வடமாகாண ஆளுனர் நிதிய வைப்பில் இருந்த 14 கோடி 40 இலட்சம் ரூபாய் பணத்தினை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை உருவாக்கி அதன் அடிப்படையில் கால அட்டவணை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More