Home இலங்கை சைட்டம் போன்று இலங்கையில் பத்து தனியார் மருத்துவ கல்லூரிகள் உருவாக வேண்டும்

சைட்டம் போன்று இலங்கையில் பத்து தனியார் மருத்துவ கல்லூரிகள் உருவாக வேண்டும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சைட்டம் போன்று இலங்கையில் பத்து தனியார் மருத்துவ கல்லூரிகள் உருவாக வேண்டும் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாணத்தில் மருத்துவர்கள் தட்டுப்பாடாக உள்ளனர். தீவகம் பகுதிகளில் உள்ள வைத்திய சாலைகளுக்கு வைத்தியர்கள் சுழற்சி முறையில் சென்று வருகின்றார்கள். கிழமைக்கு ஒரு நாள் ஒரு வைத்திய சாலைக்கு செல்கின்றார்கள். அந்த வைத்திய சாலையை சூழ உள்ளவர்கள் தீடிரென சுகவீனம் அடைந்த அந்த வைத்தியர் வைத்திய சாலைக்கு வரும் நாள் வரை சுகவீனத்துடன் காத்திருக்க வேண்டிய அவல நிலை காணப்படுகின்றது.

போரினால் பாதிகப்பட்டவர்களுக்கு உளவள மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டிய தேவையுள்ளது. ஆனால் அதற்கு வைத்தியர்கள் போதாத நிலை காணப்படுகின்றது. இந்த சிகிச்சையை தமிழ் மொழி தெரியாத சிங்கள மருத்துவர்களால் மேற்கொள்ள முடியாது. தமிழ் பேசும் வைத்தியர்களே வேண்டும். அதற்கு வைத்தியர்கள் போதாது , எனவே அதற்காக இந்தியாவில் இருந்து மருத்துவர்களை அழைத்து சிகிச்சை வழங்க முடியும்.

முன்னைய கால பகுதிகளில் இந்தியாவில் இருந்து வைத்தியர்களை வரவழைத்தால் றோ ஊடுருவி விடும் , புலனாய்வாளர்கள் வந்து விடுவார்கள் என்று காரணம் சொன்னார்கள். இப்போது என்ன பிரச்சனை ? அவர்கள் இங்கே வந்து தான் தகவல்களை திரட்ட வேண்டியே தேவை இல்லை. எனவே இந்திய வைத்தியர்களை அழைக்க வேண்டும்.

அதேவேளை இன்றைக்கு சைட்டத்திற்கு எதிராக போராடுகின்றார்கள். எல்லா துறைகளிலும் தனியார் கல்வி முறை ஊடாக இலங்கையில் கற்க முடியும் ஆனால் மருத்துவ கற்க கூடாது என்கிறார்கள்.

இதனையே பணம் உள்ளவன் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கற்கையை கற்று வந்து , இலங்கையில் ஒரு பரீட்சை எழுதி மருத்துவர் ஆக முடியும் என்றால் ஏன் இலங்கையில் மருத்துவ கற்கையை கற்று மருத்துவர் ஆக கூடாது என போராட்டம் செய்கின்றார்கள்.

சைட்டம் போன்று இலங்கையில் பத்து தனியார் மருத்துவ கல்லூரிகள் உருவாகினால் தான் மருத்துவர்களுக்கான பற்றகுறைகள் நீங்கும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More