Home இந்தியா டார்ஜிலிங்கில் சகஜநிலை பாதிப்பிற்கு மம்தா பானர்ஜியே காரணம்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு:-

டார்ஜிலிங்கில் சகஜநிலை பாதிப்பிற்கு மம்தா பானர்ஜியே காரணம்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு:-

by admin

டார்ஜிலிங்கில் சகஜநிலை திரும் பாததற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அணுமுறை களே காரணம் என மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

கூர்க்காலாந்து தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) உள்ளிட்ட அமைப்பு கள் ஒன்றுகூடி கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக அங்கு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சுற்றுலாத்தலமான டார்ஜிலிங் கில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் எம்பி முகமது சலீம் பூஜ்ய நேரத்தில் பேசியதாவது:

பள்ளிகளில் வங்க மொழியைக் கட்டாயமாக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்ததுடன், மலைப் பகுதி (டார்ஜிலிங்) நிர்வாகங்களிலும் தலையிடுகிறார். இதனால் அங்கு போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மக்கள் மீது போர் தொடுக்க வேண்டாம்.

மேற்கு வங்க மாநில உணவுத் துறை அமைச்சர் மலைப் பகுதி களுக்கு அத்தியாவசியப் பொருட் கள் எடுத்துச் செல்வது தடுக்கப் படும் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. அரசியலமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்த மம்தாவுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், ‘டார்ஜிலிங்கில் தற்போதைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. அங்கு சகஜநிலை திரும்ப வேண்டும். அமைதியான மலைப்பகுதியில் தீ பற்றி எரிகிறது என்றால் அதற்குக் காரணம் முதல்வர் மம்தாவின் அணுகுமுறைதான். மீண்டும் அங்கு அமைதி நிலவினால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் மற்றும் கூர்க்கா பிராந்திய நிர்வாகம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடியும்’ என்றார். இந்த விவாதத்தின் போது மக்களவையில் திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் இல்லை.

மம்தா அழைப்பு

கொல்கத்தாவில் முதல்வர் மம்தா கூறுகையில், ‘வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ‘இந்தியாவில் இருந்து பாஜகவை வெளியேற்றும்’ இயக்கத்தை திரிணமுல் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. இது எங்களது சவால் ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக ஓரணியில் திரண்ட 18 எதிர்க்கட்சிகளும் அடுத்த மக்களவைத் தேர்தலிலும் பாஜகவை ஒன்றிணைந்து எதிர்க்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More