Home இலங்கை நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நீதிபதி இலக்கில்லை என்கிறார் எஸ்.எஸ்.பி. ஸ்ரனிஸ்லஸ்

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நீதிபதி இலக்கில்லை என்கிறார் எஸ்.எஸ்.பி. ஸ்ரனிஸ்லஸ்

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூர் சம்பவம் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்டது இல்லை. யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்து உள்ளார்.
நல்லூரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,

நல்லூர் சம்பவம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியினை இலக்கு வைத்து நடத்தப்பட்டது இல்லை. நீதிபதியின் மெய்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் மது போதையில் இருந்தவரை கண்டிப்பதற்காக எடுத்த நடவடிக்கை காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது என தற்போது என்னால் சொல்ல முடியும்.

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால் , நிச்சயமாக அவரது வாகனத்திற்கு சூடு பட்டு இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை. நீதிபதி அவர்களும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி தனது மெய்பாதுகாவலரும்,  மதுபோதையில் நின்ற நபரும் முரண்பட்டுகொண்டதை பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றார். அந்த நேரத்தில் நீதிபதி தான் இலக்கு என வந்திருந்தால் துப்பாக்கிதாரி நீதிபதியை நேராக சுட்டு இருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் சுடவில்லை. எனவே இது நிச்சயமாக அந்த சந்தப்பத்தில் சந்தர்ப்ப சூழலில் நடந்த விடயமே என கூறுவேன்.

நீதிபதிக்கு யாழ்ப்பணத்தில் எந்த விதமான மரண அச்சுறுத்தலும் இல்லை என விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம். என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More