குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறான தாக்குதல் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறையினரே இவ்வாறான சவால்களை எதிர்நோக்க நேரிட்டால் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு எவ்வாறு அமையும் என்பதனை புரிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் எனினும் இந்த சம்பவத்தை பொருட்படுத்தாமல் விட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Spread the love
Add Comment