குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 26 ஆப்கானிஸ்தான் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காக்ரேஸ் (Khakrez ) மாவட்டத்தின் இராணுவ முகாமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தலிபான் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் 70 படையினரை கொன்றதாகவும் இராணுவ முகாமை கைப்பற்றியதாகவும் தலிபான்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை நூற்றுக் கணக்கான தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment