Home இலங்கை முல்லைத்தீவுக்கு வெளிச்சவீடு வேண்டும் – வடமாகாண சபையில் பிரேரணை

முல்லைத்தீவுக்கு வெளிச்சவீடு வேண்டும் – வடமாகாண சபையில் பிரேரணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்ச வீடுகள் இல்லாமையினால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் 100வது அமர் வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகாணசபை  பேரவை  கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணை ஒன்றினை முன் மொழிந்தார்.அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

முல்லை மாவட்ட மீனவர்கள் முன்னைய காலத்தில் ஆழ்கடல் மீன் பிடி தொழிலுக்கு சென்று இரவு வேளைகளில் வெளிச்ச வீட்டின் துணையுடன் கரை திரும்புவர். எனினு ம் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்ப

ட்ட அந்த வெளிச்சவீடு அழிவடைந்திருக்கும் நிலையில் போருக்கு பின்னராக கடந்த 8 வருடங்களாக முல்லை மாவட்ட மீனவர்கள் தமது அமைப்புக்கள் ஊடாக பல தடவைகள், பலரிடம் தமக்கு வெளிச்ச வீட்டை அமைத்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தபோதும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.

இதனால் 

சுமார் 73 கிலோ மீற்றர் நீளமான முல்லை மாவட்டத்தின் கரையோரத்தில் வாழ்கின்ற சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் வெளிச்ச வீடு இல்லாமையினால் பாதிக்க ப்படுகின்றார்கள்.

குறிப்பாக திசை மாறி செல்கின்ற பல சம்பவங்கள் நடக்கின்றது. எனவே இந்த விடய ம் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சரிடம் இந்த பிரேரணையை ஊடாக கோரிக்கையை முன் வைக்கிறேன் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More