குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பிலான விவாதம் இன்றைய தினம் பாராளுமன்றில் நடத்தப்பட உள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள உடன்படிக்கை குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.
இன்று முற்பகல் 10.30 மணிக்கு நாடாளுமன்றில் இந்த உடன்படிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
அரசாங்க மற்றும் தனியார் ஆகியனவற்றின் கூட்டு அபிவிருத்தித் திட்டமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கைக்கு கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் நாளைய தினம் சீனாவுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment