Home உலகம் இணைப்பு 2- நவாஸ் ஷெரீஃப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இணைப்பு 2- நவாஸ் ஷெரீஃப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

by admin

உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்   பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்   பிரதமர் பதவியில் நீடிக்க தகுதி அற்றவர் – உச்சநீதிமன்றம்

Jul 28, 2017 @ 08:37
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியில் நீடிக்க தகுதி இல்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் இன்றையதினம் தீர்ப்புளித்துள்ளது.

பனாமாவில் உள்ள   மோசக் பொன்சேனா என்ற சட்ட நிறுவனம் தம்மிடம் இருந்த 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டிருந்தது.

அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், உலக தலைவர்கள்,   பணம் பதுக்கி வைத்துள்ளமை அம்பலமாகியது.

இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததனையடுத்து  இது குறித்து விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை  உச்சகநீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு விசாரணையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியாம் ஷெரீப், மருமகன் முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெரீப் உள்ளிட்டோரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

குறித்த விசாரணைக்குழுவின்  அறிக்கை உச்சநீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் வெளியான தீர்ப்பில் நவாஷ் ஷெரீபை தகுதி நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன்   6 வார காலத்துக்குள் நவாஸ் ஷெரீப், அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More