அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பில் டி.டி.வி.தினகரனை உதிர்வரும் ஓகஸ்ட் 1ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.டி.வி.தினகரன் மீது சென்னை எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றில் உள்ள இரண்டு அன்னிய செலாவணி தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்குகளில் குற்றச்சாட்டுகளை புதிதாக பதிவு செய்து, 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 1ம் திகதி ஒத்திவைப்பதாக அறிவித்த நீதிபதி அன்றைய தினம் குற்றச்சாட்டுகள் புதிதாக பதிவு செய்யப்படும் எனவும் அன்று டி.டி.வி.தினகரன் நேரில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Add Comment