Home இலங்கை எனது ஆசீர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது – ஜனாதிபதி

எனது ஆசீர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது – ஜனாதிபதி

by admin

பாராளுமன்ற தலைகளின் எண்ணிக்கையை மாற்றி ஆட்சியை கைப்பற்றுவதற்கு எவர் கனவு கண்டாலும், அதற்கு தனது விருப்பத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி   தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 113 ஆசனங்களை பெற்றபின்னர் அரசாங்கமும், ஜனாதிபதியும் முடிவடைந்து விடுவார்களென எதிர்க்கட்சி உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளமை தொடர்பில் நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள், 113 ஆசனங்களைப் பெற்றாலும் அரசியலமைப்புக்கமைய எவரும் தனது ஆசீர்வாதம் இன்றி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாதென தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றத்துக்கான தடைகளை அகற்றி, தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் போது, வெற்றுகோசமிடுவோர் நாட்டில் பல்வேறு குழப்ப நிலையை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி   தெரிவித்தார்.

இன்று (31)  ; ஹிங்குராக்கொட வலய கல்வி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  ; மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்ல விடயங்களில் ஈடுபடுவோருக்காக அன்றி, வெற்று கோசமிடுபவர்களுக்கே இன்று சில ஊடகங்களில் இடம் வழங்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி   அதன் காரணமாக நாட்டில் சிலர்; அரசாங்கம் தொடர்பில் தவறான புரிதலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் குடும்ப ஆதிக்கத்தை விதைத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய நாட்டின் பயணத்தை மாற்றி, நாட்டில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு கிராமத்திலிருந்து வந்த தலைவர் என்ற வகையில் தனது தலைமையில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் கோசமிட்டுக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி   தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More