குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆப்கானிஸ்தானுக்கான ஈராக்கிய தூதரகத்திற்கு அருகாமையில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதல்களுடன் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூதரகத்தின் வாயில் கதவில் தற்கொலை குண்டுதாரியொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிதாரிகளுடன் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில மணித்தியாலங்கள் துப்பாக்கிச் சமர் நீடித்ததாகவும், அனைத்து துப்பாக்கிதாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment