Home இலங்கை 2020ம் ஆண்டிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி

2020ம் ஆண்டிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் 2020ம் ஆண்டிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் 38ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பூரண சுதந்திரம் காணப்படுவதாகவும், அதற்கு அரசாங்கம் எவ்வித தடைகளையும் விதிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்க்க முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்குக் கிடைக்கப் பெற்றுள்ள புதிய சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார். பொதுமக்களின் உரிமைகளை உறுதி செய்யவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More