Home இந்தியா சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்க கோரும் சசிகலாவின் மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை:-

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்க கோரும் சசிகலாவின் மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை:-

by admin

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்க கோரும் சசிகலாவின் மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக 66 கோடியே 66 லட்சம் ரூபா பெறுமதியான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களு10ர் தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்ததனைத் தொடர்ந்து இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் உச்சநீதிமன்றில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும். அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த மறு ஆய்வு மனு இன்று விசாரணைக்கு வருகின்றது. விசாரணை முடிந்து உடனே இன்று மாலை உச்சநீதிமன்ற பதிவாளர் இந்த விசாரணை மீதான முடிவை வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More