குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பத்தாயிரம் ரூபா லஞ்சம் பெற்றுக்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரவபொத்தான காவல் நிலையத்தில் கடமையாற்றி வரும் காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரால் மீட்கப்பட்ட சில பொருட்களை விடுவிப்பதற்காக இவ்வாறு லஞ்சம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரங்களை வெட்டுவதற்காக பயன்படுத்திய கருவிகளை மீள ஒப்படைப்பதற்காக லஞ்சம் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment