Home இலங்கை போராட்டங்கள் இலங்கையுடனான உறவுகளை பாதிக்காது – இணைந்து பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் – சீனா

போராட்டங்கள் இலங்கையுடனான உறவுகளை பாதிக்காது – இணைந்து பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும் – சீனா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அண்மையில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் இலங்கையுடனான உறவுகளை பாதிக்காது என இலங்கைக்கான சீனத் தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இரு தரப்பு உறவுகளில் எவ்வித அழுத்தங்களையும் கொண்டு வராது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சீனா இலங்கைக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில எதிர்ப்புக்களினால் இரு தரப்பு உறவுகள் எவ்வித அடிப்படையிலும் பாதிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை, சீனா ஆகியன கூட்டாக இணைந்து பல்கலைக்கழகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More