Home உலகம் போர்த்துக்கல்லில் சிறிய விமானம் கடற்கரையில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

போர்த்துக்கல்லில் சிறிய விமானம் கடற்கரையில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

by admin

போர்த்துக்கல்லின்  தலைநகரம் லிஸ்பனில்  உள்ள  கடற்கரை ஒன்றில்  சனத்தொகை அதிகமுள்ள  பகுதி ஒன்றில்  சிறிய விமானம் ஒன்று தரை இறங்கியதன் போது ஏற்பட்ட    விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடற்கரையில் மக்கள் சுடியிருந்த சமயம்  வானில் பறந்து கொண்டு இருந்த குறித்த  விமானம் ஒன்று கடற்கரையை நோக்கி தாழ்வாக பறந்து வந்த நிலையில் அதன் விமானியினால்  மேல் நோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைய ஏற்பட்டதனைத் தொடர்ந்து கூட்டத்துக்கு மத்தியில் தரை இறங்க முயற்சித்ததனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது விமானத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதும்   விமானம் மோதி 8 வயது குழந்தையும், 50 வயது மதிக்கத்தக்க ஆணும் உயிரிழந்துள்ளதுடன்  சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More