குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு 10 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளது. வரட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இவ்வாறு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சுக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாத நிதியும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
மண்சரிவு, மழை வெள்ளம் போன்ற காரணிகளினால் சேதமடைந்த பாடசாலைகள் உள்ளிட்டனவற்றை புனரமைப்பதற்கு நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
Spread the love
Add Comment