Home இலங்கை கிளிநொச்சியில் 18 பரீட்சை நிலையங்களில் 1617 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

கிளிநொச்சியில் 18 பரீட்சை நிலையங்களில் 1617 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாளை மறுதினம் எட்டாம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 1617 மாணவா்கள் 18 பரீட்சை நிலையங்களில் தோற்றவுள்ளனா்.

2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை நாளை மறுதினம் எட்டாம் திகதி நாடு முழுவதும் ஆரம்பமாகவுள்ளது. நாடு  முழுவதும் 2230 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 15227  பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனா்.அத்தோடு 28000 அதிகாரிகளும் கடமையாற்றவுள்ளனா்.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 08 ஓருங்கிணைப்பு நிலையங்கள் 18 பரீட்சை நிலையங்கள் 1617 மாணவா்கள் இதில் 423 போ் வெளிவாரி பரீட்சார்த்திகளாக தோற்றவுள்ளனா்.

இதேவேளை இம்மாதம் நடைபெறவுள்ள தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சைக்கு 10 ஒருங்கிணைப்பு நிலையங்களும்,32 பரீட்சை நிலையங்களும், 3141 மாணவா்களும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனா். பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More