Home உலகம் மனஸ் தீவு தடுப்புமுகாமில் அகதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மனஸ் தீவு தடுப்புமுகாமில் அகதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மனஸ்தீவின் கிழக் லொரங்கு அகதிகள் இடைத்தங்கல் நிலையத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில்   அகதி ஒருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனஸ்தீவின் காவல்துறை தலைமை அதிகாரி இதனை உறுதிசெய்துள்ளார்.

நபர் ஓருவர் காட்டுப்பகுதியில் இறந்துகிடப்பதை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட புகைப்படலத்தில் சடலத்தின் உடலில் காயங்கள் காணப்படுகி;ன்றன எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதேவேளை மற்றுமொரு அகதியுடனான மோதலில்  இவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்  குறிப்பிட்ட நபர் கடந்த ஓரு வருடகாலமாக மனோநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரிற்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அகதிகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள்கள் விடுத்துள்ளதாகவும் முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More