Home இலங்கை தமிழக மீனவர்கள் 49 பேர் கைது – கடற்படையினர் இருவர் கடத்தப்பட்டதாக வெளியான செய்திக்கு கடற்படை மறுப்பு

தமிழக மீனவர்கள் 49 பேர் கைது – கடற்படையினர் இருவர் கடத்தப்பட்டதாக வெளியான செய்திக்கு கடற்படை மறுப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழக மீனவர்கள் 49 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, இலங்கைக் கடற்படையினர் இருவர் தமிழக மீனவர்களால் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் அதனாலேயே பெரும் எண்ணிக்கையான தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக மீனவர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் கடற்படையினர் கடத்தப்பட்டனர் என்று வெளியான தகவல்களை இலங்கைக் கடற்படையினர் முற்றாக மறுத்துள்ளனர். அவ்வாறான சம்பவம் ஏதும் நடக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கடத்தப்பட்ட இரு கடற்படையினரையும் இலங்கை இந்தியாவிற்கு இடையில் உள்ள மண்மேட்டில் இருந்து  காயங்களுடன் மீட்டு உள்ளதாகவும் , அவர்கள் இருவரும் தற்போது காங்கேசன்துறை கடற்படை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More