இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்பட்டுள்ள பணிச்சுமை காரணமாக கோலி உட்பட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று வெளியான செய்திக்கு விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தான் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினேனா என கேள்வி எழுப்பியுள்ள அவர் தான் ஆடவில்லை என யார் கூறியது எனவும் எங்கிருந்து இது வருகிறது எனத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் ஒருநாள் தொடருக்கான அணித்தேர்வுக்காக அமரப்போகிறோம் எனவும் தங்கள் மனத்தில் பல திட்டங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்னமாதிரியான அணிச்சேர்க்கை தேவை என்பது குறித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்த அவர் ஒரு அணித்தலைவர் என்ற வகையில் தான் மையமாக இருப்பதாகவும் குழுவிடம் என்ன பேச வேண்டும் என்பது தனக்குத் தெரியும் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
Add Comment