Home உலகம் உலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரத்திற்கு ஓய்வு 2021-ம் ஆண்டு வரை இயங்காது:-

உலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரத்திற்கு ஓய்வு 2021-ம் ஆண்டு வரை இயங்காது:-

by admin

புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணி காரணமாக 2021 வரை ஓடாது

லண்டன்:

பிரிட்டன் நாடாளுமன்ற கட்டிடத்தில் 1859-ம் ஆண்டில் மணிக்கூண்டு திறக்கப்பட்டது. பிக்பென் என்று அழைக்கப்படும் இந்த கடிகாரம் கடந்த 157 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. உலகின் முக்கியமான வரலாற்று சின்னமான பிக்பென் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது நிறுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, அந்தக் கடிகாரத்தில் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்த கடிகாரம் அமைந்த எலிசபெத் கோபுரத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ளவும் பிரிட்டன் அரசு முடிவு செய்தது. இதற்கென தனியாக நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது. அந்தப் பராமரிப்புக் குழு அடுத்த வாரம் முதல் தனது பணியைத் தொடங்கவுள்ளது. இதையடுத்து, கடிகாரத்தின் செயல்பாடு எதிர் வரும் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுவதாகவும், எதிர் வரும் 2021-ஆம் ஆண்டு வரை கடிகாரம் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புனரமைப்பு பணிகளுடன் எலிசபெத் கோபுரத்தில் சுற்றுலாப் பயணிகளையும், பராமரிப்புப் பணியாளர்களையும் ஏற்றிச் செல்ல உதவும் தானியங்கி லிப்ட், சமையலறை, கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன என்று பராமரிப்பு நிபுணர் குழுவின் தலைமை கட்டட நிபுணரான ஆடம் வாட்ரோப்ஸ்கி கூறியுள்ளார்.

பிக்பென் பழுது பார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஏறத்தாள 5 கோடி பவுண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் நாடாளுமன்ற நிதிக் குழு அறிக்கை தெரிவிக்கிறது. நான்கு ஆண்டுகள் கடிகாரம் நிறுத்தப்பட்டாலும், ஆங்கில புத்தாண்டு தினத்தை அறிவிக்கும் விதமாக கடிகாரம் மணியடிக்கச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு  முன்னரும் 1983, 1985, 2007 ஆண்டுகளில் பிக்பென் கடிகாரத்தில் பழுது நீக்கும் பணிகள் நடைபெற்றபோதும் குறுகிய காலத்துக்கு கடிகாரத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More