குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் டரன்ஜித் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் பல்லின பல்மத கலாச்சாரத்தை உறுதி செய்வதற்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல், முதலீடுகளுக்கு ஒத்துழைத்தல் என பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்தியாவின் மிகப் பெறுமதி மிக்க பங்காளி என அவர் குறிப்பிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிகவும் வலுவான பாதுகாப்பு உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Add Comment