Home இந்தியா இந்தியாவில் சிறுபான்மையினர் மீது பசு பாதுகாவலர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கண்டனம்:-

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது பசு பாதுகாவலர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கண்டனம்:-

by admin


இந்தியாவில் சிறுபான்மையினர் மீது பசு பாதுகாவலர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்கா நடத்திய ஆய்வின் அறிக்கை அண்மையில் டிரம்ப் நிர்வாகத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ரெக்ஸ் டில்லர்சன் நேற்று வொஷிங்டன் நகரில் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பா.ஜனதா தலைமையின் கீழ் நடந்து வரும் ஆட்சியில் சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவது குறித்து, நாகரிக சமூக அமைப்புகள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றன எனவும் இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதுடன் அவர்களது வழிபாட்டு தலங்களும், சொத்துகளும் சேதப்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுபான்மை இனத்தவர் மீது பசு பாதுகாவலர்கள் நடத்தும் தாக்குதல்களை மத்திய அரசு தடுக்க தவறி விட்டதெனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More