பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு தசாப்த கால அரசியல் வாழ்க்கையின் முக்கியமான சந்தர்ப்பங்களை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது.
‘ரணிலின் தூரநோக்கு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கண்காட்சி நாளை முதல் 20 ஆம் திகதி வரை காலை 10.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள் அதனைப் பார்வையிட்டார்.
Add Comment