Home இந்தியா உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்

உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்

by admin

  உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உத்கல் விரைவு புகையிரதத்தின்  14  பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர்  உயிரிழந்துள்ளதுடன்   72 பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள

எனினும் இது வரை உயிரிழப்பு பற்றிய முழுமையான தகவல்கள்  பெறப்படவில்லை என  தெரிவித்துள்ள  இந்திய மத்திய புகையிரத அமைச்சர் சுரேஷ் பிரபு தன் மேற்பார்வையில் மீட்புப் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

பூரியிலிருந்து ஹரித்வார் செல்லும் உத்கல் விரைவு புகையிரதம் முசாபர் நகரின் கத்தவ்லி புகையிர நிலையம் அருகே  ; விபத்துக்குள்ளானது.


திடீரென பெரிய அளவில்  அவசர  பிரேக்கை போடப்பட்டதால் அதன் 14 பெட்டிகள் தடம்புரண்டதாக கூறப்படுகிறது,

மீட்புப் பணிகள்  தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும், தான் நேரடியாக நிலைமைகளைக் கண்காணித்து வருவதாகவும்  அமைச்சர் சுரேஷ் பிரபு ட்வீட் செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More