Home இலங்கை கடற்படைத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் :

கடற்படைத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னய்யா இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கையின் 21ம் கடற்படைத் தளபதியாக சின்னய்யா   கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சின்னய்யாவை கடற்படையின் தளபதியாக அண்iமையில் நியமித்திருந்தார். கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதுடன் சின்னய்யா வைஸ் அட்மிரலாக பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளும் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன, கடற்படைத் தளபதிக்கான வாளை புதிய கடற்படைத் தளபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More