Home இந்தியா வேலூர் சிறையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது:-

வேலூர் சிறையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது:-

by admin

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்வதனால் சிறையிலேயே ‘ஜீவசமாதி’ அடையப் போவதாக தெரிவித்து முருகன் கடந்த 18ம் தகதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்

முருகனின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ள நிலையில் முருகனுக்கு கட்டாயமாக உணவு கொடுப்பது, சிகிச்சைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவமதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More