Home இலங்கை பாதகமான செயல்களை தட்டிக் கேட்டமைக்காகவே நீதி அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார்

பாதகமான செயல்களை தட்டிக் கேட்டமைக்காகவே நீதி அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார்

by admin


நாட்டுக்கு பாதகமான செயல்களை இவ்வாட்சியாளர்கள் முன்னெடுக்கும் போது அதனை தட்டிக்கேட்டமைக்காவே  நீதி அமைச்சர்   பதவி நீக்கப்பட்டுள்ளார்  என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற  நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டதாவது,

விஜயதாச ராஜபக்ஸவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஐ.தே.கவினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடயத்தில் நீதியை நிலைநாட்ட முடியாமல் போனமைக்கு இவர் தான் காரணம் என்ற போலியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒருவருக்கு நீதி வழங்கும் விடயத்தில் அமைச்சரின் தலையீடு இருக்க முடியாது. அப்படி தலையீடு இருந்தால் அது நீதியாகவே இருக்க முடியாது.இலங்கையில் உரிய முறையில் நீதியை நிலைநாட்டாத பல சந்தர்ப்பங்கள் உள்ளன.அதற்கு நீதி அமைச்சர் காரணமாக இல்லை.

இன்று இலங்கை நாடு சர்வதேச அழுத்தங்களுக்கு அடி பணிந்தும் சுயநலன்களை அடிப்படையாக கொண்டும் சர்வதேச ஆட்சியாளர்களின் கால்களில் மண்டியிட்டு கிடக்கின்றன.

சர்வதேசமானது இலங்கையில் தமிழர்களின் விடயங்களில் நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டை எதிர்பார்க்கின்றது.இதற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஸபக்ஸ இடம்கொடுக்கவில்லை.

எங்களது இலங்கை நாட்டை இவ்வாட்சியாளர்களிடமிருந்து காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என  நாமல் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More