Home இந்தியா தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் இன்று ஆளுனர் சென்னைக்கு வருகிறார்.

தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் இன்று ஆளுனர் சென்னைக்கு வருகிறார்.

by admin

தமிழகத்தில் நிலவும் குழப்பமான  அரசியல் சூழ்நிலையில் இன்று ஆளுனர்  வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வருகிறார்.

தமிழகத்தில் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் பிளவுகள் ஏற்பட்டதால், அரசு     குழப்பமான நிலையில் உள்ளது.    டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்துள்ள 19  சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுனரை சந்தித்து தமிழக முதலமைச்ர் எடப்பாடி பழனிசாமியை  பதவியிலிருந்து   நீக்க வேண்டும் என மனு கொடுதிருந்தனர்.

மனு கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். தற்போது டி.டி.வி.தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின்  எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ள நிலையில்   அரசு பெரும்பான்மையை இழந்துவிடும் என்றும், அதனால் அரசு தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்றும் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ்  கட்சிகள், சட்டசபையை உடனே கூட்டவேண்டும் என்றும், அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையிலேயே ஆளுனர்    வித்யாசாகர் ராவ் இன்று   சென்னைக்கு வருகிறார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More