Home இந்தியா இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்:-

இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்:-

by admin


இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன ஏவுகணை தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம்  17 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் இந்திய கட்றபடையிடம் உள்ள போதும் இராணுவத்திடம் இல்லை என்பதனால் நீண்ட தூரம் சென்று எதிரி இலக்கை அழிக்கும் ஏவுகணைகள் வேண்டும் என்று ராணுவம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் 70 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் ஏவுகணை, போர் விமானங்கள், ஆளில்லா உளவு விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் போன்ற எதையும் தாக்கி அழிக்க வல்லமை படைத்த நடுத்தர அதிநவீன ஏவுகணைகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து இந்த அதிநவீன ஏவுகணைகளை தயாரிக்க உள்ளன.

ஏதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல் கட்டமாக சில ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் இந்த நடுத்தர அதிநவீன ஏவுகணைகளால் தரையில் இருந்து வானில் 70 கி.மீ. தூரம் உள்ள எதிரி இலக்கையும் தாக்கி அழிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More