குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியை முன்னெடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் தற்போதைய கூட்டு அரசாங்கம் ஆட்சியை முன்னெடுக்கும் என உள்நாட்டு பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளிலும் காலத்திற்கு காலம் பிளவுகள் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அது கால ஓட்டத்துடன் மாற்றமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணைகளின் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment