Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக சர்வதேசம் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் – வட மாகாண முதலமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக சர்வதேசம் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் – வட மாகாண முதலமைச்சர்

by admin

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக சர்வதேச நாடுகள்  இலங்கை அரசாங்கத்திற்கு போதிய நெருக்குதல்களை  கொடுக்க வேண்டுமென  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள ஊடககுறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாம் எழுத்து மூலமும் வாய்முலமும் பல கோரிக்கை விடுத்த போதும் அரசாங்கம் எவ்வித ஆக்கபூர்வமான நடிவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கமும் சர்வதேச நாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போதும்   எந்தவொரு செயற்பாடுகளும் ; மேற்கொள்ளப்படவி;ல்லை எனவும் இதனால் அரசாங்கத்துக்கு போதிய நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் எனக்  நாம் சர்வதேசத்திடம் கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More