Home இலங்கை கிளிநொச்சியில் பெரும்பாலான வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் நிலை – பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்:-

கிளிநொச்சியில் பெரும்பாலான வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் நிலை – பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-


கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயநிலை காரணமாக சுகாதாரத் துறையினர் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு உதவியாக மன்னார் பிராந்திய தொற்றுநோய்விஞ்ஞான மருத்துவ அதிகாரி சுதாகர் தலைமையிலான டெங்கு விசேட நடவடிக்கைப் பிரிவினரும் இன்று நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனா்.

இக்குழுவினரது ஆய்வுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகளில் காணப்படும் நீர்தேங்கக்கூடிய பாத்திரங்கள், பழைய போத்தல்கள், மற்றும் வீசியெறியப்படும் பாவனைப் பொருட்கள் ஆகியவற்றிலே டெங்கு நுளம்புகள் வளருவது கண்டறியப்பட்டுள்ளது.எனவும்

எனவே கிளிநொச்சி மாவட்ட மக்கள் தத்தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் காணப்படும் நீர் தேங்கக்கூடிய பொருட்களை உடனடியாக சேமித்து அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவ்வாறு அகற்றுவதற்குத் தேவையான உதவிகளை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வழங்குவார்.

இதனை செய்யத்தவறும் பட்சத்தில் எதிர்வரும் மழைக்காலத்தில் பாரிய டெங்கு அனர்த்த்தினை கிளிநொச்சி மாவட்டம் எதிர்நோக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More