குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
68 இந்தியா மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற உத்தரவில் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 68 இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கட்டளைக்கமைவாக குறித்த மீனவர்களை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம் றியாழ் விடுவித்தார்.
அதேவேளை குறித்த மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் கட்டளையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என நீதவான் தெரிவித்தார்.
Add Comment