Home இலங்கை வாகன விபத்தில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் காயம்

வாகன விபத்தில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் காயம்

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்துள்ளனர். நேற்றைய தினம் இரவு 11.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹோமகம ஹைலெவல் வீதியின் நாவீன்ன சந்தியில் பஸ் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட இந்த விபத்துச் சம்பவத்தில் 19 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்த ஒரு மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தலங்கம பிரதேசத்தில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் பங்கேற்று திரும்பிய குறித்த பஸ்ஸில் 65 பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மோட்டார் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More