Home இந்தியா திருச்சி மலைக்கோட்டையில் 3 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் தந்தை மகன் பலி – மீட்பு பணி தொடர்கிறது:-

திருச்சி மலைக்கோட்டையில் 3 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் தந்தை மகன் பலி – மீட்பு பணி தொடர்கிறது:-

by admin

திருச்சியில் மலைக்கோட்டை அருகே உள்ள தஞ்சை குளத்தெருவில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில்  தந்தை, மகன் உயிரிழந்துவிட்டனர். கட்டிட இடிபாடுகளில் 5  குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11  பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

திருச்சியில் நேற்று கனமழை பெய்துள்ளதாலும், பக்கத்தில் இருந்த ஒரு வீடு இடிக்கப்பட்டதாலும் வலுவிழந்ததால் இந்த கட்டடம் விழுந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்றுள்ள காவல்துறையினரும் மீட்புப்படையினரும் மீட்புப்பணியில் இடுபட்டு வருகின்றனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் பணியில் போலீசார் மற்றும் மீட்புப்படையினருடன், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கட்டிடங்களை தகர்த்து சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் கார்த்திக் (45), ஹரீஷ் (6) ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். இருவரும் தந்தை- மகனாவர். மற்ற 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More