குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 76 இந்திய மீனவர்களும், படகு விபத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 இந்திய மீனவர்களும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட முறைகளில் இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. படகு மூலம் இந்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Add Comment