Home உலகம் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட தீவிர வலது சாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது

பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட தீவிர வலது சாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவில்  தடைசெய்யப்பட்ட தீவிர வலது சாரி அமைப்பை சேர்ந்த நால்வரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த நவ நாஜிகள் குழுவை சேர்ந்தவர்கள் இராணுவத்தில் பணி புரிபவர்கள்  என அரசாங்கம் தெரிவித்துள்ளது

பிரித்தானியாவின் தடைசெய்யப்பட்ட நசனல் அக்சன் என்ற வலதுசாரி குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே நால்வரையும் கைதுசெய்துள்ள  பிரித்தானிய காவல்துறையினர் அவர்களது உடமைகளை   சோதனை செய்து வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் மேற்கு மிட்லான்ட் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்  எனவும் புலனாய்வு தகவல்களை அடிப்படையாக வைத்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இந்த கைதுகள் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான திட்டங்களை கொண்டிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More