Home இந்தியா உத்தரப்பிரதேசத்தில் தொடரும் புகையிரத தடம் புரள்வு விபத்து – இன்றும் 7 பெட்டிகள் தடம் புரண்டன

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் புகையிரத தடம் புரள்வு விபத்து – இன்றும் 7 பெட்டிகள் தடம் புரண்டன

by admin

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா பகுதியில் ஹவுரா – ஜபல்பூர் செல்லும் விரைவு புகையிரதத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூருக்கு  பயணித்துக் கொண்டிருந்த   விரைவு புகையிரதம்  இன்று காலை உத்திரப்பிரதேசத்தின்    சோன்பத்ரா பகுதியில் வந்தபோது, அதன் ; 7 பெட்டிகள் திடீரென தடம் புரண்டுள்ளன.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும்  தடம்புரண்ட புகையிரத  பெட்டிகளில் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் புகையிரத  அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளர்h.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகையிரத விபத்துக்கள் ஏற்பட்டு வருவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More