உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் வெளியேற்றுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போலந்து பிரஜை தற்கொலை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரித்தானியாவில் குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கான  நிலையத்தில் தடுத்து வைக்கபட்டிருந்த போலந்து பிரஜை  தற்கொலை முயற்சியின் பின்னர் மரணித்துள்ளார். ஹர்மொன்ட்ஸ்வேர்த் தடுப்புநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 28 வயது போலந்து பிரஜைக்கே இந்த அவலம் நிகழந்துள்ளது.

குறிப்பி;ட்ட நபர் தற்கொலை முயற்சி காரணமாக உடனடியாகவே  இறந்துவிட்டார் எனவும் எனினும்  அவரிற்கு  மருத்துவமனையில் உயிர்காக்கும் முயற்சி இடம்பெற்றது எனவும்  அதன் பி;ன்னரே அவர் இறந்ததாகவும் அதிகாரிகள் நாடகமாடுகின்றனர் எனவும் சட்டத்தரணிகளும் குறிப்பிட்ட முகாமில் உள்ளவர்களும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உள்துறை அமைச்சு சமீபத்தில் தடுப்பு நிலையத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட 28 வயது நபர் மருத்துவமனையில் மரணித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்டநபர்  தற்கொலைக்கு முன்னரே ஹர்மொன்ட்ஸ்வேர்த் நிலையத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டாரா என்பதை உள்துறை அமைச்சு உறுதிசெய்ய தவறியுள்ளது. இதேவேளை ஹர்மொன்ட்ஸ்வேர்த் நிலையத்தின்  முகாமையாளர் கடிதமொன்றில் தற்கொலைக்கு முயன்றவேளை நபர் ஓருவர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபரிற்கு இரண்டுவாரத்திற்கு முன்னரே பிணை வழங்கப்பட்ட போதிலும் உள்துறை அமைச்சு அவரது விடுதலையை தாமதப்படுத்தி வந்ததாக ஹர்மொன்ட்ஸ்வேர்த் நிலையத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் உள, உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனினும் அவரிற்கு தேவையான உதவி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள ஹர்மொன்ட்ஸ்வேர்த் நிலையத்தில் உள்ளவர்கள் தற்கொலைக்கு முதல்நாள் அவர் குழந்தை போன்று

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.