குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விவசாயம் செய்ய விரும்புவோருக்கு காணிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் இவ்வாறு காணிகள் வழங்கப்பட உள்ளது.
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் நபர்களுக்கு விவசாயம் செய்யப்படாத அரச மற்றும் தனியார் காணிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் உணவு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது அரசியல் காரணிகளை கருத்திற் கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment