Home இலங்கை இலங்கை அரசாங்கம் விரைவில் நம்பிக்கை தரும் வகையில் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா

இலங்கை அரசாங்கம் விரைவில் நம்பிக்கை தரும் வகையில் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமல் போனோர் அலுவலகத்தை இலங்கை அரசாங்கம்  விரைவில்  நிறுவ வேண்டும் என  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இன்றையதினம் ஆரம்பமான  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது அமர்வினை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் விரைவில் நம்பிக்கை தரும் வகையில்  நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர்   காணாமல் போனோர் விடயம் தொடர்பிலும்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பிலும்  மற்றும் மக்களின் காணிகளை  விடுவிக்கும் நடவடிக்கை தொடர்பிலும்  முன்னேற்றம் ஏற்பட வேண்டியது அவசியமானது என அவர்  தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தகுற்றச்செயல்களுக்கு  பொறுப்பு கூறும் வகையிலும்  நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம்  மேற்க கொள்ள வேண்டும் எனவும்  சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More