குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அல் சஹாப் தீவிரவாதிகள் சோமாலிய படையினர் மீது நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கென்ய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மற்றும் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தபபட்டுள்ளது. வெடி பொருட்கள் நிரம்பிய வண்டியொன்றில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 30 படையினர் கொல்லப்பட்டதாக அல் சஹாப் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளாக அல் சஹாப் தீவிரவாதிகளினால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment