Home இலங்கை கொக்கிளாய் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது (வீடியோ இணைப்பு )

கொக்கிளாய் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது (வீடியோ இணைப்பு )

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளா்
கொழும்பில் கடந்த 08.08.2017 திகதி மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களுடன் ஆளுநர் றெயினோல் கூரே மேற்கொண்ட சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய கொக்கிளாய்  மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஆளுநர்  அலுவலகத்தில் 07.09.2017 அன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர், மறித்தன்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் முல்லைத்தீவு வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர், மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் உட்பட மீனவர்  சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

•             மீன்பிடி கொக்கிளாயில் மீனவர் துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு பிரதேச செயலாளர், மீன்பிடித்துறை அமைச்சை சேர்ந்த ஒரு அதிகாரி, நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளில் ஒருவர், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இருவர் எதிர்வரும் வாரங்களில் நேரடியாக சென்று தகுந்த இடத்தினை தேர்வு செய்வது என ஆலோசனை வழங்கப்பட்டது.

•             1982 ம் ஆண்டு முன்னாள் பிரதம மந்திரி ஆர்.பிரேமதாஸ அவர்கள் இந்த மீனவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்ததாக வீடமைப்பு அதிகாரசபையின் முல்லைத்தீவு முகாமையாளர் விஜிதடி கே கமகே தெரிவித்தார். யுத்தத்தின்போது அழிவடைந்த குறித்த வீடுகளை மீள புனரமைப்பு செய்வதற்காக தற்போதய அமைச்சர் சஜித் பிரேமதாஸ அவர்கள் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். நிலஅளவை திணைக்களம் குறித்த வீடுகள் இருந்த பகுதியை அளவீடு செய்ய முற்பட்டபோது எழுந்த எதிர்ப்பின் காரணமாக அந்த நடவடிக்கை கைவிடப்பட்டதாக கூறினார்.

•             இதன்போது கரைத்தூபற்று பிரதேச செயலாளர் குறித்த அளவீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு உரிமையாளர்;கள் இருப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து நிலஅளவு சட்டம் இல 6ன் படி உரிமையாளர்கள் தமது நிலத்தினை உறுதி செய்வதற்காக குறித்த இடங்களில் விளம்பரங்களை பிரசுரிப்பது எனவும் அதேபோன்று பத்திரிக்கைகளில் விளம்பரங்களை பிரசுரிப்பது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கு இணங்கிய பிரதேச செயலாளர் ஒரு மாத காலத்திற்குள் விளம்பரங்களை பிரசுரிப்பதாக தெரிவித்தார்.

•             அடுத்த பிரச்சினையாக  நீரியல்வளத்துறை திணைக்களம் இழுவை வலைக்கான அனுமதியினை வழங்கியுள்ளபோதும் வாடி அமைப்பதற்கான அனுமதியினை பிரதேச செயலாளர் வளங்கவில்லை என கொக்கிளாய் மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

•             நீரியல்வளத்துறை திணைக்களத்தினால் வழங்கப்படும் படகு அனுமதிப்பத்திரத்தினை பிரதேச செயலர் எந்தவித அனுமதியும் இன்றி வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டினார். அதற்கான ஆவணத்தினையும் சாட்சியாக சமர்ப்பித்தார். மீன்பிடித்துறை அமைச்சினால் மட்டுமே அவ்வாறான அனுமதிகளை வழங்க முடியும் பிரதேச செயலாளரினால் அவ்வாறு வழங்க முடியாது என்றும் அவர்  தெரிவித்தார். தம்மால் அனுமதி இவ்வாறு வழங்கப்பட்டுள்ளபோது வாடி அமைப்பதற்கான இடத்தினை பிரதேச செயலாளர் வழங்க வில்லை என்றும் தெரிவித்தார். பிரதே செயலாளர் தனது அதிகாரத்தினை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் தீர்மானம் ஒன்றினை தாம்  எடுக்க வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More