Home இலங்கை வடமாகாண கமநலசேவை உத்தியோகத்தர்களுக்கான உரமானிய பயிற்சி நெறி

வடமாகாண கமநலசேவை உத்தியோகத்தர்களுக்கான உரமானிய பயிற்சி நெறி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாவட்ட மற்றும் பிரதேச கமநல சேவை அலுவலகங்களுக்கான உரமானிய பயிற்சி இடம்பெற்றுள்ளது.  இன்று (14.09.2017) மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தலைமையில் இப் பயிற்சி இடம்பெற்றது.

கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் உரமானியத்தினை பணமாக கொடுக்கும் நடைமுறைக்குரிய கணனிப்பயிற்சி நெறியில் வடமாகாணத்தில் உள்ள ஜந்து மாவட்டங்களிலும் கடமையாற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள் இதில் பங்குபற்றினர்.

இப்பயிற்சி நெறியில் தேசிய உரமானிய செயலகத்தை சேர்ந்த உதவிப்பணிப்பாளர் கபில திசநாயக்கா மற்றும் தேசிய உரமானிய செயலகத்தின் வவுனிய மாவட்ட உதவிப்பணிப்பாளர். விஜயவர்த்தன போன்றோர் கலந்து கொண்டதுடன் கொழும்பு பல்கலைகழக கணனி மென்பொருள் பொறியியலாளர் திலீப்  வளவாளராகவும் கலந்து கொண்டு பயிற்சிகளையும் கருத்துக்களையும் வழங்கி வைத்தனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More