Home உலகம் லண்டன் புகையிரத நிலைய குண்டு வெடிப்புக்கு தோல்வியடைந்துகொண்டிருக்கும் பயங்கரவாதிகளே காரணம்

லண்டன் புகையிரத நிலைய குண்டு வெடிப்புக்கு தோல்வியடைந்துகொண்டிருக்கும் பயங்கரவாதிகளே காரணம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லண்டன் நிலக் கீழ் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தோல்வியடைந்துகொண்டிருக்கும் பயங்கரவாதிகளே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் இன்னொரு தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டுள்ளனர் எனவும் இவர்கள் உளநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவித்த  டிரம்ப   இவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்துகொண்டிருக்கும் பயங்கரவாதிகளிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் இணையமே அவர்களின் முக்கிய சாதனம எனவும் தெரிவித்த  அவர்  இதனை நாங்கள் முறியடித்து சிறந்த வழியில் பயன்படுத்தவேண்டும் என்றும்   தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரயாண தடை இன்னமும் பரந்துபட்டதாகவும் கடுமையானதாகவும் மாற்றப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More