Home உலகம் பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் பாரிய வாகன விபத்து நால்வர் பலி:-

பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் பாரிய வாகன விபத்து நால்வர் பலி:-

by admin

பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். லொறி மோட்டார் சைக்கிள் உட்பட பல வாகனங்கள் மோதுண்ட இந்தப் பகுதியின் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

விபத்து நடந்த M5 நெடுஞ்சாலை நீண்ட நேரமாக மூடப்பட்டு இருந்தது. வேறுபாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் வாகன ஓட்டுனர்களிடம் கேட்டுருந்தனர். பிரித்தானிய நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் J15 J14க்கு இடைப்பட்ட பகுதியில் விபத்து நடந்திருப்பதாகவும் பல வாகனங்கள் இதில் தொடர்பு பட்டு இருப்பதாகவும் தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்துக் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More