Home இலங்கை கிளிநொச்சியில் வாள் வெட்டு நால்வர் அவசர சிகிசை பிரிவில்

கிளிநொச்சியில் வாள் வெட்டு நால்வர் அவசர சிகிசை பிரிவில்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி இன்று (17)  பிற்பகல் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வா் வைத்தியசாலை அவசர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில்  உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

குறித்த விடுதியில் இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது  அவா்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது இரு குழுக்களுக்கிடையேயான மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இதன்  போது படுகாயமடைந்த நால்வரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிசிசை  பிரிவில் அனுமதிக்கப்பட்டு  அதில் ஒருவா் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் அவசர சிகிசை பிரிவில்  சிகிசைப் பெற்று வருகின்றனா்.  இவா்களுக்கும் ஆபதான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலையினா் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலைய குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரியும்,  சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரியுமான உப பரிசோதகர் சுமனசிறி தலைமையிலான குழுவினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த விசாரணையின் போது சந்தேக நபர்கள்  நால்வரின் பெயர்கள் பெறப்பட்டுள்ள போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More